ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள்.
ஏர்வாடி லெப்பை வளவில் உள்ள முஹாம் பள்ளி வாசலில் அடங்கியிருக்கும் சலாஹுத்தீன் அப்பா அவர்களின் அடக்கஸ்தலதிற்கு முன்னால் உள்ள வாசலில் உள்ள தகவல்கள் சுமார் 400ஆண்டு பழமையான வரலாற்றில் தொடங்குகிறது..
”அல் குதுபுஸ் ஸமான் அஷ்ஷைகு செய்யிதினா சுலைமான் வலியுல்லா (ரலி) அவர்களின் பிறப்பு ஹிஜிரி 1000-ல் காயல் பட்டிணத்தில் பிறப்பு. வஃபாத்து 1079ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 19 செவ்வாய் கிழமை. அடக்கம் மறைக்காயர் பள்ளி.
இவர்களுக்கு ஐந்து குமாரர்கள். (ஐந்து ரத்தினங்கள்.)
அஷ்ஷைகு சம்சுதீன் (வலியில்லாஹ்) அடக்கம் காயல்பட்டணம். அஷ்ஷைகு அஹமது (வலியில்லாஹ்) அடக்கம் மஞ்சக்கொல்லை. அஷ்ஷைகு சதகதுல்லா (வலியில்லாஹ்) அடக்கம் கீழக்கரை. அஷ்ஷைகு ஷாம் ஷாஹாபுத்தீன் (வலியில்லாஹ்) அடக்கம் காயல்பட்டணம். அஷ்ஷைகு சலாஹுத்தீன் (வலியில்லாஹ்) அடக்கம் நெல்லை ஏர்வாடி “
இதன் அருகில் உள்ள கல்வெட்டு இந்த இடம் ஹிஜிரி 1308-இல் புதுப்பிக்கப் பட்டதாக கூறுகிறது....
பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளிக்கு வஃபு செய்யப்பட்ட கடையின் மேல் உள்ள தேதி (1.4.68)
இதனைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் தகவல்களை ஈமெயில் மூலமாகவோ, கமெண்ட்ஸ் மூலமாகவோ தெரிவிக்கவும்.
|