Posted By:peer On 4/24/2012 |
|
Si Sulthan:
Mohammed Meera Sahib: 5ந்தெரு ஆற்றுப்படியை ஒட்டியுள்ள தோட்டத்தில் 3 புளிய மரங்கள் வரிசையாக நிற்கும். (இன்றும் இருக்கிறது). கல்லு பொறக்கிக் கொடுப்பதற்கு ஒருஆள். கல்எறிந்து புளியை விழத்தட்ட ஒருநாள். யாரும் வருகிறார்களா? என்று ஆள்பார்க்க ஒருஆள். மூன்று ஆட்கள் ஒருங்கிணைந்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் மடித்துக்கட்டப்பட்ட சாரத்தில் நிறைந்துவிடும் புளியை பங்கு வைப்பது என்பது ஒரு கலை.
குச்சி பங்கு. பங்கு வைப்பவர் மொத்த புளியங்காய்களையும் மூன்று சமபங்காக வைத்துவிட்டு மூன்று சிறிய குச்சியையும் வைத்துவிட்டு இரண்டுபேர் முன்னிலையில் மாத்திரம் (மூன்றாமவர் அந்த பக்கம் இருக்கக் கூடாது) குச்சியை மாத்திரம் இது இன்னார்க்கு என்று முடிவு செய்வார். அதனை பங்கு வைப்பவர் மற்றும் பக்கத்தில் இருப்பவர் மாத்திரம் அறிவர். மூன்றாவருக்கு யாருக்கு எந்த குச்சி என்பது தெரியாது. குச்சி இன்னாருக்கு என்று முடிவான பிறகு மூன்றாவர் அழைக்கப்படுவார். மூன்றாவர் குச்சியை மாத்திரம் எடுத்து மூன்று பங்குகளிலும் வைப்பார். யாருக்கு எந்த குச்சியோ அவர் அந்த பங்கை எடுத்துக்கொள்ள வேண்டும். இதுக்குத்தான் குச்சி பங்கு என்று பெயர். களவு எடுத்தாலும், பங்கு வைப்பதில் மாத்திரம் நியாயம் முறையாக கடைபிடிக்கப்படும். இன்றைய இளைய தலைமுறைக்கு இதுபோன்ற த்ரில்லான வாய்ப்புகள் இல்லலே இல்லை.
Sherin Gani: Shhhhhhhhh vaay oooruthu
Hasan Shaikh : அந்த பக்கம் போய் வருசக்கனக்க ஆச்சி மாப்பிளை 6 மணிக்கு மேலை போனால் பேய் நிற்குமாம் கபரடி பக்கம் வேறு. கொடுக்காபுளியை கொஞ்சம் கண்ணில் காட்டுங்களேன்....
Si Sulthan: கொடுக்காபுளிய போன வரம் போட்டிருந்தேனே?
|