Articles from the members

Category
  General Knowledge   தமிழ் மொழி   Career Counselling
  Technology   Power of Creator   Religious
  Moral Story   Medical   Kids
  Sports   Quran & Science   Politics
  Poetry   Funny / Jokes   Video
  Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்   Others   சுய தொழில்கள்
  Stars of Eruvadi
 
தோப்பும் ப‌ட்ட‌மும்
Posted By:peer On 2/12/2012

benadryl and pregnancy first trimester

benadryl and pregnancy nausea redirect

முஹர்ரம் முடிந்ததும் ஸஃபர் மாதம். (நம்ம ஊர்ல இந்த மாதத்திற்கு பெயர் தோப்புப்பொறை) இந்த மாதத்தின் ஆரம்பத்திலேயே பட்டம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் நம்ம ஊர் சிறுவர்கள். நான் அறிந்து தமிழகத்திலேயே பட்டத்தின் வகைகள் நம்ம ஊர்லதான் அதிகம்.  

சாதா மியால், வாலில்லா மியால், (மீன்வால் என்பது மறுவிதான் மியால் ஆனது) உறும்பி பட்டம், மனுஷன் பட்டம், பெட்டி பட்டம், குளோப் பட்டம் என ஏர்வாடியில் பட்டத்தின் வகைகள் பல உண்டு. இரண்டு நீளமான மூங்கில் குச்சியை எடுத்துக் கொண்டு, ஒன்றை வில் போல் வளைத்து, மற்றதை நேராக வைத்து சாதாரண நியூஸ் பேப்பரில் வைத்து ஒட்டி செய்யப்படும் பட்டத்திற்கு சாதா மியால் என்று பெயர். சாதா மியால் பட்டத்தின் கீழ் முனைக்கு கண்டிப்பாக வால் கட்ட வேண்டும். வாலில்லா மியாலுக்கும் வால் கட்ட வேண்டிய அவசியம் இல்லை. பழைய துணியை ஒரு இஞ்ச் அகலத்திற்கு நீளமாக கிழித்து சாதா மியால் பட்டத்தின் கீழ் முனையில் கட்ட வேண்டும். இதற்குதான் வால் என்று பெயர். இந்த பட்டம் சரியாக பறப்பதற்கு 'சீர்' மிக முக்கியம். பட்டத்திற்கு 'சீர்' பிடிப்பதில் வல்லவர்கள் (எக்ஸ்பர்ட்ஸ்) பலர் நம்ம ஊரில் உண்டு.

தோப்புப்பொறை வந்துட்டாலே நம்ம ஊர்ல பட்டம் செய்வோர், பட்டம் செய்து விற்போர், நூல் முறுக்குவோர், நூல் விற்பனை செய்வோர் என பலரும் பிஸியாகி விடுவார்கள். கடைகளில் கலர் பேப்பர் விற்பனை கொடி கட்டி பறக்கும். வீடுகளில் மூங்கிலால் ஆன ஒட்டடை கம்புகள், முருங்கக்காய் பறிக்க வைத்திருக்கும் மூங்கினால் ஆன கொழுக்கிகள் காணாமல் போய், உறும்பி பட்டத்தின் தட்டுக்களாக மாறி இருக்கும். ஆறு மற்றும் வாய்க்காலின் இரு கரைகளிலும் உள்ள தோட்டங்களில் வேலியில் உறுவப்பட்ட மூங்கில் குச்சிகள் ஆளுயர மனுஷன் பட்டமாக மாறி உயரே பறந்து கொண்டிருக்கும். உம்மா புதிதாக வாங்கி அதுவரை உடுக்காமல் கோடியாக வைத்திருந்த புதிய சேலையை கிழித்து பட்டத்திற்கு வால் கட்டி, உம்மாவிடம் செமத்தியாக அடி வாங்கியவர்கள் பலர் நம்ம ஊரில் உண்டு.

தோப்புப்பொறையில் கைத்தறி உள்ள வீடுகளில் சிறுவர்கள் எல்லோரும் நூல் கொடுக்கும் அட்சய பாத்திரமாக மாறி இருப்பார்கள். ராட்டை சுற்றும் வீடுகளில் உள்ள பெண்களின் வெளித்தேவைகள் (கடைக்கு போவது, கடிதம் எழுதுவது, ரேஷன் கடைக்குச் செல்வது போன்றவை) உடனடியாக நிறைவேற்றப்படும். பகரமாக பட்டம்விட நூல் கிடைக்குமே.

உறுமி பட்டம், மனுசன் பட்டம், பெட்டிப் பட்டம், குளோப் பட்டம் போன்ற பட்டங்கள் பறப்பதற்கு கொஞ்சம் பலமான நூல் வேண்டும். இந்த தேவைக்காக பல சிறுவர்கள் பாய் நெய்பவர்களின் வீடுகளை அடை காப்பர். பாய் நெற்வதற்கு பயன்படும் மதுல் எனப்படும்; கத்தாளை நாறினால் உருவாக்கப்படும் இந்த நூலை கை கொண்டு அறுக்க முடியாது. அய்யகோ அந்த காலமே தனி.

இன்றைக்கு எனது மகனிடம் பட்டம் என்றால் 'Graduation" ஆ என்று கேட்கிறான். என்ன சொல்வது காலத்தின் மாற்றத்தை. - Mohammed Meera Sahib








Golden Old Days - ம‌ல‌ரும் நினைவுக‌ள்
Date Title Posted By
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..