buy citalopram citalopram 20mg அன்று ஏர்வாடி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி வழக்கத்துக்கு மாற்றமாக அமைதியாக இருந்தது. ஸ்கூல் காண்பவுண்டுக்கள் வைத்து வண்டி மாட்டுக்கு லாடம் கட்ட வருபவர்கள் விரட்டப்பட்டனர். தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், இன்னபிற பணியாளர்கள்;. அனைவரும் டென்ஸனில். மாணவர்கள் அனவைரும் சீருடையில் வந்திருந்தனர். சாதாரண நாட்ளில் வேட்டி கட்டி வரும் ஆசிரியர்கள்கூட அன்று பேண்ட் சர்ட்டில். வருடத்தில் எப்போதாவது ஒரு முறை நடக்கும் இன்ஸ்பெக்ஸன் அன்றுதான் நடக்கவிருக்கிறது.
காலை இரண்டாம் பிரியட். பத்தேகாலுக்குத் துவங்கி 11மணிக்கு முடிவடையும். மற்ற நாட்களில் அந்த நேரத்தில் வழக்கமாக நவாப் ஹோட்டலில் அல்வாவும் அவர்கள் தரும் உபரி மிக்ஸரையும் தின்று டீ குடிக்கச் செல்லும் கணேசன் சார் கூட அன்று அமைதியாக ஸ்டாஃப் ரூமில் அமர்திருந்தார். ஒன்பதாம் வகுப்பு ஆ பிரிவில் நாங்கள். இரண்டாம் பிரியட் கணக்குப் பாடம். முத்துப்பாண்டி சார் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
'ஒரு வட்டத்தின் விட்டம் 12 செ.மீ. ஆரத்தின் அளவு என்னய்யா?..' வகுப்பறையின் அமைதியைக் கிழித்துக் கொண்டு முத்துப்பாண்டி சாரின் குரல் மாணவர்களின் காதுகளை கிழித்தது. வெளியில் இரண்டு பேர் நடந்து வரும் செருப்புச் சத்தம். மாணவர்களின் பார்வை முழுவதும் வகுப்பறை வாயிலை நோக்கி அப்போதுதான் அந்நிகழ்வு நடந்தது. எங்களது வகுப்பறைக்குள் நுழைந்தார் மாவட்ட கல்வி அதிகாரி எனப்படும் DEO. அவரைத் தொடர்ந்து தலைமையாசிரியர் அப்துர் ரஹ்மான் சார். ஓட்டுமொத்த மாணவர்களும் எழுந்து நின்று 'குட்மார்னின் சார்' சொல்லி அமர்ந்தனர்.
முத்துப்பாண்டி சாரை வகுப்பைத் தொடர பணித்த தலைமையாசிரியர் அப்துர் ரஹ்மான் சார் நடத்தப்படும் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்க தயாரானார். 'ஒரு வட்டத்தின் விட்டம் 12 செ.மீ. ஆரத்தின் அளவு என்னய்யா?..'வகுப்பைத் தொடர்ந்தார் முத்துப்பாண்டி சார். பதில் சொல்ல தயாரான முந்திரிக்கொட்டைகளை உட்காரச் சொல்லிவிட்டு எங்கள் பக்கம் பார்வையை ஓட்டினார் அப்துர் ரஹ்மான் சார். அவரது பார்வையில் சரியாக பட்டது மீரான். ( இவரைப்பற்றி பிரத்யேகமாகச் பின்னர் சொல்கிறேன்.)
'ஒரு வட்டத்தின் விட்டம் 12 செ.மீ. ஆரத்தின் அளவு என்னப்பா?..' மீரானை பார்த்த தலைமையாசிரியர் கேட்ட கேள்வி. ஏதோ கவனத்தில் இரந்த மீரான் எழுந்த நின்றான். வகுப்புலே எத்துனையோ பயலுவோ இருக்கானவோ. நான் மாத்திரம்தான் கிடைச்சனா?.' மீரான் வாய்க்குள் முணுமுணுத்தது முன் பெஞ்சில் இருந்த எங்களுக்குச் சரியாகக் கேட்டது. மனதுக்குள் சிரித்து கொண்டோம். 'ஆரம் எத்தனை செ.மீ.' சொல்லுப்பா.. கேட்ட தலைமையாசிரியர் சற்றே திரும்பி வெளியே பார்க்கவும், முன்னால் இருந்த எனது முதுகைக் குத்தி 'எலே! சொல்லம்ல..' என்றான் மீரான். நான் 6 செ.மீ.' என்று எனது புத்தகத்தில் எழுதி காண்பிக்க பார்த்து விட்ட மீரான் '6 செ.மீ' சார் என்றான்.
அத்துடன் இன்ஸ்பெக்ஸனை முடித்துக் கொண்ட DEO புறப்பட்டுச் சென்றார். டக்கென்று Recess Period க்கான மணியடிக்க அன்றைய டென்ஸனில் இருந்து விடுபட்டவர்களாக உப்பு ஓடை நோக்கிச் சென்றோம்.
எனது மரியாதைக்குரிய ஏர்வாடி சகோதரர்களே! தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் 'பழைய மாணவர்கள் சங்கம்' என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நம்மஊர் ஏர்வாடியில் மாத்திரம் பழைய மாணவர் சங்கம் என்ற அமைப்பு இல்லை. இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்தி நமது ஊர் பள்ளியில் பயின்ற அனைவரையும் இணைத்து பழைய மாணவர் மன்றம் அமைக்க ஏற்பாடுகள் செய்யலாமே? அதன் மூலம் நாம் பயின்ற பள்ளிக்கும், நாம் பயின்ற பள்ளியிலே பயின்று வரும் மாணவர்கள் அனைவருக்கும் நம்மால் இயன்ற கல்விப் பணியைச் செய்யலாமே. ஏர்வாடி சகோதரர்களே முன்வாருங்கள். - Mohammed Meera Sahib |