Posted by S Peer Mohamed
(peer) on 12/27/2023 11:05:29 AM
|
|||
பாராட்டு விழா அழைப்பு. 28 வருடங்களுப் பின் நமது லெப்பைவளவு முஹல்லாஹ்வில் குர்ஆனை முழுவதும் மனனம் செய்து அல்லாஹ்வின் வேதத்தை நெஞ்சில் சுமக்கும் பாக்கியம் பெற்ற ஓர் ஹாஃபிழ் உருவாகி இருக்கிறார். மார்க்கச் சட்டங்களை முறையாகக் கற்றறிந்த ஆலிம்களை சுமார் 345 வருடங்களாக தொடர்ந்து பெற்றிருக்கும் முஹல்லாவில் குர்ஆனை முழுவதும் மனனமிட்ட ஹாஃபிழ்கள் எண்ணிக்கை மிகமிக குறைவு. **லெப்பைவளவு ஹாஃபிழ்கள்*** காழி அஹ்மத் லெப்பை ஆலிமின் மகன் அதன் பின் சுமார் 168 ஆண்டுகள் கழித்து தற்போது கீழ முஹல்லம் பள்ளிவாசலின் இமாமாக பணியாற்றும் மவ்லவி அல்-ஹாஃபிழ் அல்-காரீ P. முஹம்மது ரஃபீக் ஆலிம் தாவூதி அவர்கள் ஏர்வாடி & லெப்பைவளவின் இரண்டாவது ஹாஃபிழாக 1988 -ம் ஆண்டு பட்டம் பெற்றார்கள். அதற்குப் பின் 1995 -ம் ஆண்டு முஹல்லாவின் மூன்றாவது ஹாஃபிழாக மவ்லவி அல்-ஹாஃபிழ் S.ஆஷிக் இக்பால் ஆலிம் ஃபைஜி அவர்கள் பட்டம் பெற்றார்கள். இவர்களுக்குப் பின் 28 ஆண்டுகள் கழித்து அல்லாஹ்வின் வேதத்தை முழுமையாக மனனமிட்டு ஹாஃபிழாக உருவாகி இருக்கும் அல்-ஹாஃபிழ் சம்சுத்தீன் முஃபீஸ் அவர்களுக்கு லெப்பைவளவு ஜமாத் சார்பாக பாராட்டு விழா இன்ஷா அல்லாஹ் 26/12/2023 செவ்வாய் லுஹர் தொழுகைக்குப் பின் லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது.
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |