ஊழலை திசை திருப்ப தன் உறுப்பினரையே கொலை செய்த ஆர்எஸ்எஸ்-ன் குரூர முகம் ,:

Posted by Haja Mohideen (Hajas) on 8/2/2017 2:12:35 AM

 

ஊழலை திசை திருப்ப தன் உறுப்பினரையே கொலை செய்த ஆர்எஸ்எஸ்-ன் குரூர முகம் ,:

 

கேரளா மட்டுமல்ல இந்தியா முழுவதும் நாறிய ஒரு சம்பவம் கடந்த வாரத்தில் உண்டென்றால் அது கேரளா பாஜகவினரின் லஞ்ச ஊழல் தான். மருத்துவக் கல்லூரி ஒன்று அமைப்பதற்கான அனுமதி பெற்று தருவதாக ஹவாலா மூலமாக பாஜக தலைவர்களின் கையில் கொண்டு சேர்க்கப்பட்ட பணம். அனுமதிக்காக பேரம் பேசப்பட்ட தொகை ரூ.20 கோடி. ஆனால், முதற்கட்டமாக ஒரு முன்பணமாக வழங்கப்பட்ட தொகை ரூ.5.6 கோடி. பேசிய படி 5.6 கோடி ரூபாய் பெற்றுக் கொண்ட பின்னரும் அனுமதி வாங்கி தரவில்லை என எஸ்.ஆர் கல்வி குழும சேர்மேன் ஷாஜி கேரள மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரனின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, அவர் கட்சிக்குள்ளேயே ஒரு விசாரணை கமிஷனை நியமிக்கிறார். அந்த விசாரணை கமிஷன் கேரள மாநில பாஜக செயலாளர் எம்.டி.ரமேஷ் மற்றும் வினோத் உள்ளிட்ட சில பாஜக தலைவர்கள் பணம் வாங்கியதாகவும், ஆனால் அனுமதி பெற்றுத் தரவில்லை எனவும் அறிக்கையளித்தது.

இவ்வாறு உட்கட்சி விசாரணை கமிஷன் விவகாரமான அறிக்கையளிக்கவே, அதை தனது அலுவலக மேஜையின் அறைக்குள் பூட்டி வைத்துக் கொண்டார் மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன். ஆனால், காங்கிரஸை போன்றே கேரளா பாஜகவிலும் எண்ணற்ற கோஷ்டிகளுக்கு பஞ்சமில்லை. அதில் ஒரு கோஷ்டியின் கையில் இந்த அறிக்கை தட்டுப்படவே, அதனை நகல் எடுத்து ஏசியாநெட் சேனலுக்கும் கொடுத்து விட்டனர்.

ரூ.2000 க்கான கள்ள நோட்டு அடித்து சிக்கலில் ஆழ்ந்து போன கேரள பாஜகவிற்கு இது ஒரு பெரிய தலைவலியாகிப் போனது என்றே கூற வேண்டும். சொந்த கட்சியினராலாயே ஊடக விவதாங்களில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. அதில் ஒன்று போலியாக ரசீது அடித்து பணம் வசூலித்து கொண்ட ஊழலும் சேரும்.

இவ்வாறு, கள்ள நோட்டு , லஞ்ச ஊழல், வசூலிப்பு ஊழல் என பலவகையிலும் பாஜகவின் பெயர் கேரள மக்கள் மத்தியில் நாறிப் போயிருந்தது.

இப்படிப்பட்ட சூழலில் தான், திருவனந்தபுரம் எம்.ஜி கல்லூரி பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. திருவனந்தபுரத்தில் மற்றெல்லா கல்லூரிகளிலும் இந்திய மாணவர் சங்கத்தினரின் வெண்கொடி பறந்து கொண்டிருக்கும் போது எம்.ஜி கல்லூரியில் ஆர் எஸ் எஸின் மாணவர் அமைப்பான எபிவிபியின் காவிக் கொடி பறந்து கொண்டிருந்தது. ஆனால், எபிவிபியினரில் ஒரு பெரும்பகுதியினர் இந்திய மாணவர் சங்கத்தில் சேரவே, பல ஆண்டுகளுக்கு பின்னர் எம்.ஜி கல்லூரியில் மீண்டும் வெண் கொடி பறக்க துவங்கியது. தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே கல்லூரியும் கைவிட்டு போன அதிருப்தி உண்மையில் ஆர்.எஸ்.எஸிற்கு உண்டாகி போனது. இருதரப்புக்குமிடையே கல்லூரிக்கும் உள்ளேயும் வெளியேயும் தொடர் மோதல்கள் உருவாகின. மோதலை கட்டுப்படுத்த போலீஸார் குவிக்கப்படுவதும், அமைதி திரும்பவும் துவங்கலாயின. ஆனால், இரு தினங்களுக்கு முன் மார்க்ஸிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மார்க்ஸிஸ்ட் உள்ளூர் தலைவர்களின் வீடுகளுக்கு நேரே அதிகாலை 3 மணியளவில் கல்வீச்சு சம்பவங்கள் எதிர்பாராமல் ஆர் எஸ் எஸ்காரர்களால் நடத்தப்பட்டது. இதன் எதிர்வினையாக, தாக்குதலுக்கு உள்ளான திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலர் பினுவும் மற்றொரு நபருமாக பைக்கில் சென்று பாஜக தலைமையகத்தை கற்கள் வீசி தாக்கினர்.

ஆனால், பாஜகவினர், தாங்கள் மார்க்ஸிஸ்ட் தலைவர்களின் வீடுகளில் தாக்கியதை மறைத்து, அது தொடர்பான குற்றவாளிகளை பாதுகாத்ததுடன், தங்கள் அலுவலகத்தில் எதோ பயங்கரவாத தாக்குதல் நடந்ததைப் போன்று பிரச்சாரத்தைக் கொண்டு சென்றனர். மார்க்ஸிஸ்ட் தலைவர்களின் வீடுகளில் தாக்கிய ஆர் எஸ் எஸ்க்காரர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க அவர்கள் தயாராகவே இல்லை. ஆனால், இதற்கு நேர்மாறாக மார்க்ஸிஸ்ட் தரப்பில், கவுன்ஸிலர் பினுவை இடை நீக்கம் செய்து நடவடிக்கையும் எடுத்தனர்.

இத்தகைய பரபரப்புகள் அடங்கும் முன்பே, திருவனந்தபுரம் அருகேயுள்ள ஸ்ரீகாரியத்தில் ராஜேஷ் என்ற ஆர்.எஸ்.எஸ்க்காரர் திடீரென ஒரு கும்பலால் வெட்டப்படுகிறார். அவசரம் அவசரமாக திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மரண வாக்குமூலம் அளிக்கிறார். அதில் மணிக் குட்டன் என்பவரையும் கூடவே மேலும் 5 பேர் உட்பட மொத்தம் ஆறு பேரது பெயரைக் கூறி விட்டு இறந்து போகிறார். போலீஸார் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த போது, அவர்கள் அனைவருமே ஆர் எஸ் எஸ் இயக்கத்துடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையவர்களாகவும், முக்கிய குற்றவாளி மணிக் குட்டன் ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் சிறைவாசம் அனுபவித்து வந்ததும் தெரிகிறது.

தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தனிப்பட்ட முன்விரோதம் காரணமாகவே தாங்கள் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், இங்கே நாம் கவனிக்க வேண்டியது, கொலையாளிகளின் ஆர் எஸ் எஸ் தொடர்பு தான். ஆர் எஸ் எஸ்க்காரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பாஜகவினர் கேரளம் முழுவதும் ஒரு நாள் கடையடைப்பு நடத்தி மார்க்ஸிஸ்ட் கட்சியினர் தான் இந்த கொலையை நடத்தியதாக ஒரு பிரச்சாரத்தையும் நடத்திவிட்டார்கள். ஏற்கனவே கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்ட நிலையில், அந்த அவப்பெயரை துடைக்க ஆர் எஸ் எஸ் ராஜேஷ் என்ற தங்கள் இயக்கத்தின் ஒரு உறுப்பினரை இரையாக்கியதோ என்ற கேள்வியே தற்போது அனந்தபுரிவாசிகள் மத்தியில் பரவலாக எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது.

கடந்த பாரளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களித்த திருவனந்தபுரத்தை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன். “ ஜனங்களொக்கெ மண்டன்மார் அல்லல்லோ ? “ ( மக்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லையல்லவா ? ) என என்னிடம் திருப்பி சொன்ன அவர், இப்படிப்பட்ட கேவல அரசியல் நடத்தும் பாஜகவின் கேரளாவிற்கு வழிகாட்டுகிறார்களாம். கேரளம் இவர்களது வழியில் சென்றால் நட்டாற்றில் மூழ்கித் தான் போகும் என பதிலளித்தார்.

ஆம்.! தங்களது அவப்பெயரை மறைக்க, தங்களது இயக்க உறுப்பினரின் உயிரையே எடுக்க துணிந்த ஆர் எஸ் எஸின் கோரமுகம் தெரியாமல் கத்திக் கொண்டிருக்கின்றன ஆர் எஸ் எஸ் கசாப்புக் கடையில் பலியாடாகப் போகும் சாதாரண ஆர் எஸ் எஸ் தொண்டன்.

Eswariguru

https://www.facebook.com/ukhmz/posts/10213344213096787






Other News
1. 07-05-2024 மத்தியாஸ் மருத்துவமனை டாக்டர் மோரிஸ் மத்தியாஸ் அவர்களின் மறைவு - S Peer Mohamed
2. 20-04-2024 காஸா-195: அணு ஆயுத தளங்களை துள்ளியமாக தாக்குவோம் - இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல். - S Peer Mohamed
3. 20-04-2024 காஸா-154 - 10,800 இஸ்ரேலியா ராணுவத்தினர் உடல் உறுப்புகளை இழந்தனர் - S Peer Mohamed
4. 13-03-2024 ஏர்வாடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது - S Peer Mohamed
5. 11-03-2024 தமிழகத்தில் நோன்பின் பிறை பார்க்கப்பட்டது 12-மார்ச் - முதல் நோன்பு - S Peer Mohamed
6. 09-03-2024 ஏர்வாடியில் குழந்தைகள் கடத்தும் வதந்தி. போலீஸார் விழிப்புணர்வு - S Peer Mohamed
7. 09-03-2024 காஸா-153: இஸ்ரேல் 69 ராணுவ தளபதிகள் அழிப்பு - S Peer Mohamed
8. 09-03-2024 காஸா-152: பணிந்தது அமெரிக்காவும் இஸ்ரேலும், போர் நிறுத்தத்தை நோக்கி ஓட்டம்... - S Peer Mohamed
9. 09-03-2024 காஸா-151: ஆயிரக்கணக்கான யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேற்றம்.. - S Peer Mohamed
10. 09-03-2024 காஸா-150: குழப்பத்தில் இஸ்ரேல் மேலும் 300 ராணுவ வீரர்கள் அழிப்பு.. - S Peer Mohamed
11. 20-02-2024 காஸா-136: வல்லரசுகளை பிரமிக்கவைக்கும் ஹௌத்தீஸ் தாக்குதல். - S Peer Mohamed
12. 20-02-2024 காஸா-135: இன்னொரு போராளி குழு தோற்றம் - S Peer Mohamed
13. 20-02-2024 காஸா-134: ஹெஸ்புல்லாஹ் புதிய ஆயுதங்கள், புதிய தாக்குதல்கள். - S Peer Mohamed
14. 20-02-2024 காஸா-133: 1000 இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகள் ராஜினாமா.. - S Peer Mohamed
15. 20-02-2024 காஸா-132: ஹமாஸின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் காசா. - S Peer Mohamed
16. 17-02-2024 காஸா-131: 20,000 புதிதாக காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள். - S Peer Mohamed
17. 14-02-2024 காஸா-130: ரஃபாவில்..20 லட்சம் டாலரும் மீட்கப்பட்ட இஸ்ரேலியரும் - S Peer Mohamed
18. 14-02-2024 காஸா-129: ரஃபாவில் நடந்தது என்ன? - S Peer Mohamed
19. 14-02-2024 காஸா-128: பிசுபிசுத்து போன ரஃபா தாக்குதல். - S Peer Mohamed
20. 14-02-2024 காஸா-127: கான் யூனுசில் இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக தோல்வி. - S Peer Mohamed
21. 14-02-2024 காஸா-126:தங்களை தாங்களே சுட்டு வீழ்த்தும் இஸ்ரேலிய இராணுவம். - S Peer Mohamed
22. 14-02-2024 காஸா-125: காஸாவிலிருந்து பல படைப்பிரிவுகள் வெளியேற்றம்.. - S Peer Mohamed
23. 14-02-2024 காஸா-124: ஹமாஸிடம் கெஞ்சி கதறும் இஸ்ரேல் - S Peer Mohamed
24. 14-02-2024 காஸா-123: பாதுகாப்பற்ற நிலையில் இஸ்ரேல்.. - S Peer Mohamed
25. 10-02-2024 காஸா-122: ஹிஸ்புல்லாஹ் / ஹமாஸ் இவற்றால் சிதைந்து அழியும் இஸ்ரேல் - S Peer Mohamed
26. 10-02-2024 காஸா-121: இஸ்ரேலின் ஆயுதங்கள் ஹமாஸ் இடம்? - S Peer Mohamed
27. 10-02-2024 காஸா-120: காசாவில் தொடர்ந்து முன்னேறும் போராளிகள்? - S Peer Mohamed
28. 10-02-2024 காஸா-119: காஸாவிலிருந்து தோற்று ஓட்டம் - S Peer Mohamed
29. 10-02-2024 காஸா-118: இஸ்ரேலிய படைகளுக்காக அமெரிக்கப்படைகள் - S Peer Mohamed
30. 10-02-2024 காஸா-117: லெபனானிலும் தோற்று ஓடிய இஸ்ரேலிய இராணுவ வீரர்கள்.. - S Peer Mohamed


News Home Old News Post News

The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents..