அன்பிற்கும் கண்ணியத்திற்குமுரிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் ஈமான் அறக்கட்டளை சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை (13.10.2013) அன்று “ ஈமானிய மொட்டுகள் “ என்ற தலைப்பில் இஸ்லாமிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது . இந்த நிகழ்ச்சியில் மக்தப் மாணவ மாணவிகளுக்கான கிராஅத் போட்டிகள், குறு நாடகங்கள், வினாடி வினா, பார்வையாளர்களுக்கான வினாடி வினா , இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற உள்ளது.
மேலும் மதரசாக்களில் பயிலும் மாணாக்கர்கள் ஏற்பாடு செய்யும் ஒருநாள் இஸ்லாமிய கண்காட்சியும் நடைபெறவுள்ளது. இன்ஷா அல்லாஹ் இக்கண்காட்சிக்கு மேலும் அழகு சேர்க்க மற்றும் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் கீழ்கண்டவை தங்களிடம் இருந்தால் கொடுத்து உதவவும். 1. ஏர்வாடியின் இஸ்லாமிய வரலாற்றில் அடையாளமாக உணரப்பட்ட மதரசா ஆசிரியர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் பொருட்கள், 2. நம்மிடம் இருந்து கால வழக்கில் மறைந்து போன அல்லது மறந்துப் போன இஸ்லாமியக் கல்வி சின்னங்கள்,பொருட்கள், புகைப்படங்கள் ஆகியவை. உதாரணத்திற்கு மதரசாவில் நடந்த கம்ஸ், பேச்சு போட்டி,கிராஅத் போட்டி போன்றவற்றின் புகைப்படங்கள். ஓதிக் கொடுத்த ஹசரத் மார்களின் புகைப்படங்கள் மதரசா போட்டிகளில் பெற்ற பரிசுகள். ஓதும் பலகை ., மாலா ., எழுது கோல் ., பழைய 1ஆம் ஜீஸ்வு முதலான குர் ஆன் தொகுப்புகள். இன்னும் உங்களிடம் இஸ்லாம் மற்றும் மக்தப் சம்பந்தமான அரியப் பொருட்கள் ஏதேனும் இருந்தாலும் காட்சிப்படுத்த ஏதுவாக தந்துதவலாம். இவற்றில் ஏதேனும் தங்களிடம் இருக்குமாயின் தயவு கூர்ந்து emancharitabletrust@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அல்லது 9566773469 என்ற அலைபேசிக்கோ தகவல் கொடுத்தால் நாங்களே வந்து பெற்று கொண்டு நிகழ்ச்சிக்கு பின் திரும்பகொடுத்து விடுகிறோம் இன்ஷா அல்லாஹ்... ஜஷாக்கல்லாஹ் ஹைரா ஈமான் அறக்கட்டளை ஏர்வாடி
|