Posted by Mohamed Rafiq
(namaduoor) on 4/15/2012
|
|||
திருநெல்வேலி:வள்ளியூரில் இன்று (15ம் தேதி) ஒருங்கிணைந்த கோர்ட் கட்டடம் திறப்பு விழாவில் நீதிபதிகள், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.வள்ளியூரில் ஒருங்கிணைந்த கோர்ட் கட்டடம் மற்றும் நீதித் துறை அலுவலர்களுக்கான குடியிருப்பு திறப்பு விழா வள்ளியூர் பி.ஆர். மகாலில் இன்று (15ம் தேதி) காலை 10.30 மணிக்கு நடக்கிறது.தமிழக அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை வகிக்கிறார். அமைச்சர் செந்தூர் பாண்டியன் முன்னிலை வகிக்கிறார். நெல்லை முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி ராஜ் வரவேற்கிறார்.
பொதுப்பணித் துறை கண்காணிப்பு இன்ஜினியர் சிறில் கிறிஸ்டோர் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கிறார். |
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |