Posted by Haja Mohideen
(Hajas) on 2/28/2012
|
|||
உதயகுமார் தடுமாற தொடங்குகிறார், “ஜேர்மன்காரர் உளவாளி அல்ல”
Viruvirupu, Wednesday 29 February 2012, 02:23 GMT
கூடங்குளம் போராட்டத்தில் ஒரு திருப்பமாக ஜேர்மன் பிரஜை Sonnteg Reiner Hermann நாடுகடத்தப்பட்ட பின், செய்தியாளர்களை நேற்று சந்தித்தார் போராட்டக் குழுவின் தலைவர் உதயகுமார். நாகர்கோவிலில் நடைபெற்றது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு. (ஜேர்மன்காரரும் நாகர்கோவிலில் உள்ள சிறிய லாட்ஜ் ஒன்றில் வைத்துதான் கைது செய்யப்பட்டார்) “கைதான ஜெர்மானியருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றுதான் முதலில் தெரிவித்தார் உதயகுமார். ஆனால் தொடர்ந்து அவரே தனது வாயால் ஜேர்மன்காரருக்கும் தமக்கும் உள்ள தொடர்பு பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டார். “அவருடன் எனக்கு கடந்த 4 ஆண்டுகளாக பழக்கம் உண்டு. நாகர்கோவிலில் அவர் தங்கியிருக்கும் போது, அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால், வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுப்பேன். நான் நடத்தும் பள்ளிக்கு, அவரை அழைத்துச் சென்றதாக நினைவு இருக்கிறது“ என்றார் உதயகுமார். எந்தத் தொடர்பும் இல்லாதவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுக்கும் அளவுக்கு, 4 ஆண்டு கால பழக்கம் இருந்திருக்கிறது!கைது செய்யப்பட்ட ஜேர்மன்காரர் விசாரணையின்போது தாம் இந்தியாவில் என்ன செய்தோம் என்பதை ஒப்புக்கொண்ட காரணத்தாலேயே நாடுகடத்தப்பட்டார். அவரது விசாரணையின்போது, ஜேர்மன் தூதரக ஆட்களும் இருந்துள்ளனர். அனைத்துத் தரப்பும் ஒப்புக்கொண்டு, நாடுகடத்தல் நடைபெற்றது. இது ஒரு சாதாரண டூரிஸ்ட் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட விவகாரமல்ல. இதனால் ராஜதந்திர ரீதியான அழுத்தங்கள் புதுடில்லிக்கு ஏற்படப் போகின்றன. அப்படியிருந்தும் ரிஸ்க் எடுத்து, நாடுகடத்தலை நிறைவேற்றியிருக்கிறது மத்திய அரசு. உதயகுமார் மேலும் கூறுகையில், “Sonnteg Reiner Hermann ஜெர்மனியில் கணினி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கும் எந்த உளவு நிறுவனத்துக்கோ, தொண்டு நிறுவனத்துக்கோ தொடர்பு கிடையாது. அவருக்கும், நாங்கள் நடத்தும் போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை” என்றார். சபாஷ். இவருக்கும் அவருக்கும் தொடர்பு கிடையாது. ஆனால், அவர் உளவுத்துறையின் ஆள் அல்ல என்பது, இவருக்கு தெரியுமாம்.
நாடு கடத்தப்பட்ட ஆளுடன் உதயகுமாருக்கு என்ன டீல்?Viruvirupu, Tuesday 28 February 2012, 03:45 GMT
கூடங்குளம் அணு மின்சார நிலையம் இயங்கக் கூடாது என்பதில் ஆர்வமுள்ள வெளிநாட்டு சக்திகள், அங்கு நடைபெறும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு பைனான்ஸ் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு (நாம் அறிந்த வகையில் அது உண்மை). போராட்டத்துக்கு தலைமை தாங்கும் உதயகுமாருக்கு ஜேர்மன் என்.ஜி.ஓ. ஒன்றின் பணம் கேரளா ஊடாக வந்து சேர்வதுபற்றி விறுவிறுப்பு.காமில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது போராட்டம் நடைபெறும் ஏரியாவில் வைத்து கைது செய்யப்பட்ட ஜேர்மன் பிரஜை ஒருவர் இந்தியாவில் இருந்து நாடுகடத்தப் பட்டுள்ளார். நாகர்கோவிலில் உள்ள சிறிய லாட்ஜ ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட ஜேர்மன் பிரஜை Sonnteg Reiner Hermann, அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்துச் செல்லப்பட்ட பின், சென்னையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். தமிழக உளவுத்துறையினர் இவரது விவகாரத்தில் ஆர்வம் காட்டுவதற்கு முன்பே, மத்திய உளவுத்துறை இவரை பின்தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த ஜேர்மானியர் அடிக்கடி லால் மோகன் என்ற ஓய்வுபெற்ற இந்திய விஞ்ஞானியுடன் தொடர்பு கொள்வதை கண்காணித்த சென்ட்ரல் ஏஜென்சி, தொடர்ந்தும் அவரை தமது கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்திருந்தனர். அதன்பின் மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஜேர்மன்காரர் காட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். இதில் வேறு நாட்டுத் தொடர்புகள் இருப்பதால், மத்திய அரசு வெளிப்படையான குற்றச்சாட்டுகள் எதையும் வைக்க விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே எமது ஊகம்… கூடங்குளம் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் உதயகுமார் தொடர்பாக இந்த ஜேர்மன் பிரஜை தெரிவித்த தகவல்கள் வெளிவரப் போவதில்லை. http://viruvirupu.com/german-deported-funding-kudankulam-protests/14615/ http://viruvirupu.com/udayakumar-talks-german-deported/14671/
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |