Posted by S Peer Mohamed
(peer) on 10/13/2010
|
|||
சித்திமா ஏர்வாடியைச் சேர்ந்தவர். இவரது கணவர் இறந்து 26 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. வீட்டு வேலைகள் செய்தும் ஓலையில் ஆன பொருட்களைச் செய்து விற்றும் பிழைப்பு நடத்தி வருபவர். 11 வயது சிறுமியாக இருந்து ஒரு வீட்டில் வேலைச் செய்து கொண்டிருக்கும் போது, நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் சரித்திரத்தைக் கேட்டு மனதில் துளிர் விட்ட ஆசை ஹஜ். இன்று இறைவனின் அருளால் நினைவாகிக் கொண்டிருக்கிறது. இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைப்பதின் மூலமும், உண்மையான முயற்சியினாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம். அல்லாஹ் இவரை ஈருலகத்திலும் பொருந்திக் கொள்வானாக!
|
|||
|
|||
News Home | Old News | Post News |
The view points and opinion solely those of the author or source. nellaiEruvadi.com is not responsible for the posted contents.. |