Posted By:peer On 2/14/2024 6:23:01 PM |
|
பிஜேபியை அதிகாரத்தில் அமர்த்தியதில் பி.கே. என்ற பிரசாந்த் கிஷோருக்கு பெரும் பங்குண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. டிமோவின் மீது பசுந்தோல் போர்த்தி, அழகுபடுத்திக்காட்டி, நடிக்க சொல்லிக்கொடுத்து பின்னர் கூலி அதிகம் கேட்டதால் டிமோவால் விரட்டப்பட்டவர்.
அண்மையில் ஒரு இவருடைய காணொலியொன்றை நம்மில் சிலர் பரப்பிக் கொண்டிருந்தனர். அதில் இவர் முஸ்லிம் சமுதாயத்திற்கு அறிவுரைகளை வாரிவழங்கிக்கொண்டிருந்தார்.
‘நான் வந்து முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. பிஜேபியை எதிர்க்க இஸ்லாத்திடம் தீர்வு இருக்கிறது. முஸ்லிம்கள் தீர்வை வெளியே தேடுகிறார்கள்’ என்றெல்லாம் அதிமேதாவி போல பிதற்றியிருக்கிறார்.
இவர் பிஜேபிக்கு எதிராக முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு பிஜேபிக்கு லாபம் சேர்த்துக் கொடுக்கத் திட்டமிடுவதாகவே அந்தக் காணொலியைப் பார்த்த உடன் எனக்குத் தோன்றியது.
அல்லது தன்னிடம் ஒரு பெரிய செயல்திட்டம் இருப்பதாக முஸ்லிம்களை நம்பவைத்து முஸ்லிம்தனவந்தர்களிடம் பணம் பறிக்க திட்டமிடுகிறார் என்று தோன்றுகிறது.
இவர் ஒரு பணம் பறிக்கும் மாபியா. கொஞ்சூண்டு வேலை. நிறைய பணம். பெரிய பதவி இவையெல்லாம் கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ விரும்பி முஸ்லிம்களின் முன்வந்து வலை விரிக்கிறார்.
இவர் சிந்தனை வறட்சி கொண்டவர் என்று கண்டுபிடித்து காங்கிரஸ் விரட்டி விட்டது. எனவே மறுபடியும் பிஜேபிக்கே வேறுவடிவில் வேலை செய்து கொடுக்கப் போகிறார் போல்தெரிகிறது.
-இல்யாஸ் ரியாஜி. (11.02.2024 முகநூல் பதிவு.) |